தமிழக பொதுத்தேர்வு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வசதி – அரசு ஏற்பாடு!
கடந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மேலும், மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. இதன் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 27 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை? அரசின் முடிவு!
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தாண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து தேர்வு முடிவுகள் வெளியான அன்றே 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் மற்றும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு உடனடியாக பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என முடிவு செய்தது.
இதனிடையே, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 25 ஆம் தேதியில் இருந்தே மறுதேர்வு நடைபெற இருப்பதால் இந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுத்தேர்வில் தோல்விடைந்த மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே இந்த வகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.