கவனம் மக்களே… நாளை முதல் தமிழ் நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை – உஷாரா இருந்துங்கோ!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் 11 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.09) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் ராமநாதபுரம், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவாரூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்க கடலில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி 11ஆம் தேதிக்குள் மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தமிழகத்தில் (நவ.10) நாளை முதல் கனமழைக்கும், நாளை மறுநாள் (நவ.11) முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.