தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஜூலை 20) ,நாளையும் (ஜூலை 21) சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் படி இன்று (ஜூலை 20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் நாளை (ஜூலை 21) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – முன்பதிவு தொடக்கம்!
அது மட்டுமில்லாமல் நாளை மறுநாள் (ஜூலை 22) மற்றும் அதற்கு அடுத்த நாள் (ஜூலை 23) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பந்தலூர் தாலுகா அலுவலகம், நடுவட்டத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் இளையங்குடி, சின்கோனா, செருமுள்ளி, வால்பாறை, வூட் பிரையர் எஸ்டேட், மேல் கூடலூர், ராசிபுரம், அவிநாசி, வாணியம்பாடி பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.