திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – முன்பதிவு தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்களும் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், இன்று ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதாவது, பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து முடி காணிக்கை போன்ற நேத்திக்கடன்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகாலையில் அங்கபிரதட்சணம் செய்வதால் பக்தர்களுக்கான டிக்கெட் தனி கவுண்டரில் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், ஆண்கள் வேட்டி மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார் அல்லது புடவையில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அங்கபிரதட்சணம் செய்த பின்னர் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டிக்கெட் இன்று காலை 11 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையை தவிர பிற நாட்களில் 750 டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு? ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு!
இந்நிலையில், முன்பதிவு செய்ய இருக்கும் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அங்கபிரதட்சணம் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 77,273 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 35,893 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், 8 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.