அரசு ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் சம்பள உயர்வு நிலுவையைப் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சம்பள நிலுவை
மத்திய அரசு கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 4% உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த உயர்வு ஒரு பிரிவினர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் மாத சம்பளத்துடன் 3 மாத நிலுவை தொகையுடன் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!
மேலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போது, மார்ச் மாத சம்பளம் வழங்கப்படுவதற்கு முன் நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அரசாங்கம் கடந்த மாதம் கூறியது. ஆனால் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வந்த நிலையில் அதற்கு பின் கூட நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அது வழங்கப் பட இருப்பது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அகவிலைப்படி உயர்வால் கருவூலத்துக்கு ரூ.12,868 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.