தமிழகத்தில் நேற்று கோடை மழை பரவலாக பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. அந்த வகையில் இன்றும் அழைப்பு வாய்ப்பு இரக்கிறதா என்பது குறித்து வானிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று (ஏப்ரல் 17) தென் தமிழகம் வட தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் நாளை (ஏப்ரல் 18) தென்தமிழகம் வட தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் வரும் நல்ல செய்தி – வெளியான முக்கிய தகவல்!
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை இடி மின்னுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.