விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் – மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்படியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விவசாயி:
விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி 4.4 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கான அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீதம் வரையிலும் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
இனி இவர்கள் ரேஷன் வாங்கவே முடியாது – அரசின் அதிரடி உத்தரவு!!
இதனால், கிட்டத்தட்ட 1.6 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது விவசாயிகளுக்கான உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கான செலவு தற்போது 1.02 லட்சம் கோடியில் இருந்து 2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வளர்ச்சி தற்போது மேம்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் எனவும், வேளாண் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.