பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத் தேர்வில் புதிய மாற்றம்…!
தமிழகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளி கல்வி துறை பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு :
ஆண்டுதோறும் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடைபெறும். அது போல், இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு கையேடு ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் மாணவர்கள் காப்பி அடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இருவகையான வினா தாள்கள் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகை வினாத்தாள்களிலும் வினாக்கள் ஒன்றாகவும் கேள்விகளின் வரிசை மாறுபட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் உள்ள அனைவருக்கும் ஒரே வகையான வினாத்தாள் வழங்குவதற்கு பதில் அருகருகே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வினாத்தாள்களை மாற்றி மாற்றி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் – மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!
மேலும் வினாத்தாள்கள் முன்பே கசியாமல் இருக்க, தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் மாணவர்களும், ஆசிரியர்களும் செல்போன்களை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.