மத்திய அரசின் PMAY ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் – 17 லட்சம் பேருக்கு மானியம்!
இந்தியாவில் PMAY திட்டம் சாமானிய மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் “அனைவருக்கும் வீடு” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் வீடு இல்லாத ஏழை மக்கள் அதிகம் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
‘அனைவருக்கும் வீடு’:
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், நாட்டின் ஏழை எளிய மக்களுக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இத்திட்டத்தின் அடிப்படையில் மார்ச் மாத இறுதியில் அனைவருக்கும் வீடு என்பது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 17.68 லட்சம் பேருக்கு , ரூ.41,415 கோடி வரையில் மானிய உதவி இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் வழங்குவதில் மத்திய வீட்டு வசதித்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதில் அளித்தார்.இதனை தொடர்ந்து இதுவரை கடன் இணைப்பு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.5,320 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
PMAY திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2.67 லட்சம் மானியம் கிடைக்கும் என்பது பலருக்கு தெரியவில்லை என ’பேசிக் ஹோம் லோன்ஸ்’ ஆய்வு கூறுகிறது. இதனை தொடர்ந்து “அனைவருக்கும் வீடு திட்டம்” பற்றி பொது மக்கள் பலருக்கு தெரியாமல் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். மேலும் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.