அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!
மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” முயற்சியான மேரா நேஷன் செயலியின் பதிவிறக்கம், பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
முழு விபரம் இதோ:
ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை இந்திய அரசாங்கம் 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிய இடத்திற்கு இடம் பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்து கொள்ள உதவுவது ஆகும். இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது.
TNPSC தேர்வாணையத்தின் சூப்பர் அறிவிப்பு – A டூ Z விபரங்கள் இதோ! தவறாமல் படிங்க!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் PDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களை பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் பிரச்சினை தீர்க்கப்படும், அங்கு பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெறுவார்கள்.
1.முதலில் Google Play Store க்குச் செல்ல வேண்டும்.
2.அங்கு search பகுதியை கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்ய வேண்டும்
3.மத்திய Aepds குழு பதிவேற்றிய install பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
மேரா ரேஷன் பயன்பாட்டின் அம்சங்கள்:
பதிவு: பயனர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிப்பதன் மூலம் செயலியில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
அருகில் உள்ள ரேஷன் கடைகள்: பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம், அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களை பயனர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எனது பரிவர்த்தனைகள் : ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்.
தகுதிகள்: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரர் தகுதியை சரி பார்க்க உதவுகிறது.
ஆதார் பதிவு: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் பதிவையும் செய்து கொள்ளலாம்.
உள்நுழைவு: பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படுகிறது