TNPSC தேர்வாணையத்தின் சூப்பர் அறிவிப்பு – A டூ Z விபரங்கள் இதோ! தவறாமல் படிங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அத்துடன் தற்போது TNPSCயின் தலைவர் பல முக்கிய தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குரூப் 2,2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் பல்வேறு புதிய மாற்றங்களை TNPSC தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பாக இனிமேல் TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் TNPSCயின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, குரூப் 2,2ஏ தேர்வுகள் வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் 5ம் தேதியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இதற்கான அறிவிப்பாணை 23ம் தேதி அன்று TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
ஜூன் மாத முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார் . அத்துடன் டிசம்பர் – ஜனவரி 2023 இல் இத்தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். TNPSC தேர்வுகள் தமிழகத்தில் மொத்தமாக 32 நகரங்களில் 117 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. அத்துடன் மாலையில் நடத்தப்படும் தேர்வில் எவ்வித நேரமாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து TNPSC தேர்வர்கள் தங்களை மேலும் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.