தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 2,381அங்கன்வாடி மையங்களில் LKG ,UKG வகுப்புகள் மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து தொடக்கக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

LKG ,UKG:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் விளைவாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் மீண்டும் இரவு நேர முழு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!

பொதுத்தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ளன. அதனால் 10,12ம் வகுப்புகளுக்கு விரைந்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடர்ந்து பிப்ரவரி 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அருமையான வாக்குறுதிகள்!

தற்போது மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. ஆண்டுதோறும் 52 ஆயிரத்து 933 குழந்தைகள் கல்வி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வகுப்புகள் மூடப்பட இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த தொடக்க கல்வி அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படாது. அந்த வகுப்புகளை நடத்த தேவையான ஆசிரியர்களை பணி அமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!