மின்சார பற்றாக்குறையால் செல்போன் & இணையதள சேவை துண்டிப்பு? அரசு தகவல்!
பாகிஸ்தான் நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் செல்போன், இணையதள சேவை நிறுத்தப்படாலாம் என அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் மக்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர்.
மின்சார தட்டுப்பாடு:
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மின்சாரத்தை சேமிக்கவும், மின்சார பயன்பாட்டை குறைக்கவும் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் கூட மின்தடை ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மின்சார பயன்பாட்டை குறைக்க அரசு ஊழியர்கள் பணிபுரியும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் இல்லாத நிலை இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அடிக்கடி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரீஃப் ஜூலை மாதத்தில் நாடு கடுமையான மின்வெட்டை சந்திக்கும் என தெரிவித்ததை அடுத்து அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.
தமிழகத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – புதிய வெப்சைட் அறிமுகம்!
இந்த மின்வெட்டு பற்றாக்குறை பிரச்சனையால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் ஜூலையில் இரண்டு இலக்கத்துக்கு வந்திருப்பதால் இன்னும் 6 ஆண்டுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.