மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் இனி இது அவசியம் – அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிரடி உத்தரவு:
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் குறித்து செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆசிரியர்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க அரசுகள் ஆசிரியர் மாணவர் இடையிலான செயல்பாடுகளுக்கு விதிமுறைகளை அறிவுறுத்தி அவற்றை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்கள் இருவர் உடன் படிக்கும் சக மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை செய்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அனைத்து கல்லூரிக்களுக்கும் டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 14 வரை விடுமுறை – முக்கிய அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இது குறித்து ஆலோசனை நடத்திய மகாராஷ்டிரா அரசு, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் CCTV கேமரா பொறுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு Good Touch , Bad Touch குறித்த வகுப்புகளை எடுக்க வேண்டும். வகுப்பறைகள் தவிர பள்ளியின் சுற்றுப்புறத்தில் உள்ள இடங்களில் நடக்கும் செயல்பாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார்.