ரூ.39100/- சம்பளத்தில் CBSE பள்ளியில் வேலை – விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்!
கூடுதல் உள் தணிக்கையாளர் மற்றும் நிதி ஆலோசகர் (AIAFA) பணியிடங்களை நிரப்ப Central Board of Secondary Education பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
AIAFA வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Additional Internal Auditor and Financial Advisor பதவிக்கு CBSE பள்ளியில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- SAS/SOGE/JAO தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நிதி பட்ஜெட்/கணக்கு விவகாரங்களை பொறுப்பான நிலையில் கையாள்வதில் அனுபவம் இருக்க வேண்டும்.
- தகுதியான நபர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15600-39100 + Grade Pay of Rs. 7600/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.