CBSE 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது ? – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
சிபிஎஸ்சி மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?
சிபிஎஸ்சி 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா மற்றும் 26 நாடுகளைச் சார்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தான் மாணவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்புகள் குறித்த முடிவு எடுக்க முடியும் என்பதால் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) ரயில் சேவை மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி யின் இணையதளமான cbse.nic.in மற்றும் cbse.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ,ஆசிரியர்கள் தேர்தல் பணி மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகிய இரண்டு பணிகளிலும் ஈடுபட உள்ளதால் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 23 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதியும், அதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு மே முதல் வாரத்திலும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் கொரோனா காலத்தில் ஜூலை மாதத்தில் தான் தேர்வு முடிவுகள் வெளியானது. எனவே இந்த ஆண்டு சிபிஎஸ்சி விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.