ஏப்.19ம் தேதி தமிழகம் முழுவதும் இலவச பேருந்து வசதி – மக்களின் கோரிக்கை!

0

ஏப்.19ம் தேதி தமிழகம் முழுவதும் இலவச பேருந்து வசதி – மக்களின் கோரிக்கை!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வசதி அளிக்கும் வகையில் இலவச பேருந்துகளை இயக்க அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளது.

இலவச பேருந்து:

2024 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர்களின் பணிக்காலம் முடிவடைந்து புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஆனது 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக நிர்ணயித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் கல்வி, பணி போன்ற சூழ்நிலைகள் காரணமாக ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஓட்டுப்பதிவு நாளன்று வாக்களிக்க முன்வருவதில்லை.

CBSE 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது ? – மாணவர்கள் எதிர்பார்ப்பு!

எனவே, ஓட்டுப்பதிவு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஓட்டுப்பதிவு நாள் அன்று மட்டும் பொதுமக்கள் வாக்களிக்க செல்ல ஏதுவாக நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக தேர்தல் கமிஷனும் மாநில அரசும் செலவை பங்கிட்டு கொள்ளலாம் என்றும், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!