மத்திய புலனாய்வுப் பணியகத்தில் Forensic Experts காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய புலனாய்வுப் பணியகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Forensic Experts பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Forensic Experts பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- 01.08.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- மேற்கூறிய பதவிக்கு மாதம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் 1 வருடத்திற்கு, தேர்வர்களின் செயல்திறன் மற்றும் சிபிஐயின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.