பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து – நாளை மறுநாள் வகுப்புகள் துவக்கம்!
முன்னதாக நீடிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையானது தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ரத்து செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவை கல்வித்துறை விடுத்துள்ளது.
விடுமுறை ரத்து:
தசரா பண்டிகை மற்றும் பருவ தேர்வு முடிந்த காரணத்தால் நாடு முழுவதும் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகையை ஒட்டி தெலுங்கானா மாநிலத்தில் செப்டெம்பர் மாத இறுதியில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முன்னதாக அக்டோபர் 10ம் தேதி கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன்பிறகு அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதற்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டியதுள்ளது. நடுவில் 1 வாரம் மட்டுமே மீண்டும் பள்ளி,கல்லூரிகள் இயங்க உள்ளதால் மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வர வேண்டிய சூழல் உள்ளதாக பலரும் தெரிவித்தனர். இதனால், தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் அக்டோபர் 26ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என்று செய்திகள் பரவி வந்தது.
தமிழகத்தில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. இந்த மாவட்ட மக்களே உஷார்.. வானிலை அலர்ட்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தெலுங்கானா கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தசரா விடுமுறைகள் அக்டோபர் 26ம் தேதி வரை நீடிக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இது குறித்து வெளியிடப்படவில்லை. திட்டமிட்டபடி அக்டோபர் 10ம் தேதி முதல் மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும் என்று உறுதி செய்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்