தமிழகத்தில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. இந்த மாவட்ட மக்களே உஷார்.. வானிலை அலர்ட்!
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.08) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர்,, ஈரோடு, நாமக்கல், கரூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் அக். 9ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு முடிவுகள் – எப்போது வெளியாகும்? முக்கிய தகவல் இதோ!
அதே போல அக்டோபர் 10ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, மதுரை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அக்.10ம் தேதி அன்று புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அக்டோபர் 11ம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, நாமக்கல், கிருஷ்ணரி, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்தாக அக்.12 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்