அரசு பேருந்துகளில் 19.5% டிக்கெட் கட்டண உயர்வு அமல் – பொதுமக்கள் அவதி!
இலங்கை தற்போது மிகவும் மோசமான அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து எரிபொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டணத்தின் விலையையும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
டிக்கெட் கட்டண உயர்வு:
வரலாறு காணாத அளவுக்கு இலங்கை படுமோசமான அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தான் இந்த அளவுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள், எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக இலங்கை மக்கள் அவசியமான பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்த இலங்கை அரசின் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.420 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்காக இலங்கை அரசு மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்க முன்வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணத்தின் விலையையும் அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளது. பேருந்து கட்டணத்தின் விலை கூடிய விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது ரூ.27 ஆக இருந்த பேருந்து கட்டணம் ரூ.32 ஆக உயர இருக்கிறது. இவ்வாறு பேருந்து கட்டணத்தின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையான சிக்கலில் மாட்டியுள்ளனர்.