சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பெண்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தங்க விலை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்து இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் மேலும் தங்கம் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
இதனால் திருமணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் பண்டிகை மற்றும் சுப மூகூர்த்த தினங்களில் தான் தங்கத்தின் விலை அதிகரிக்கும், தற்போது வழக்கமாகவே தங்கம் விலை உயர்ந்து தான் காணப்படுகிறது. இதனால் தங்க நகைகள் வாங்குவதில் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி ஒரு சவரன் ரூ.38,688-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து ரூ. 4,836-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 66,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.