தீவிரமெடுக்கும் மாண்டாஸ் புயல் – பேருந்து மற்றும் விமான சேவைகள் ரத்து – பொதுமக்கள் அவதி!
வங்கக்கடலில் உருவான மாண்டாஸ் புயல் தற்போது சென்னைக்கு அருகே சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதனால் தீவிர கனமழை பெய்ய கூடும் என்பதால் சென்னையில் பேருந்து மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேவைகள் ரத்து:
வங்கக் கடலில் உருவாகிய மாண்டால் புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை புதுச்சேரி மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் அத்துடன் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று இரவு சென்னை, திருவள்ளூர் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாக் நியூஸ்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Follow our Instagram for more Latest Updates
பேருந்தை தொடர்ந்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சீரடி, கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் புயலின் தாக்கம் தீவிரமடைந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.