வெளியான அறிவிப்பு.. வருமான வரிக்கான உச்ச வரம்பு உயர்வு – புதிய வரி விகிதம்! முழு விவரம் உள்ளே!
நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வருமான வரி
2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வருமான வரி விலக்கு, வருமான வரி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் – LIVE UPDATES!!
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதங்கள்:
1. நீங்கள் வருமானம் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் பெறுபவராக இருந்தால் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.
2. இதனை தொடர்ந்து உங்களின் வருமானம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சம் வரை இருந்தால் 5% வரி செலுத்த வேண்டும்.
3. இதே போல் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமான பெறுபவர்கள் 10% வரி செலுத்த வேண்டும்.
4. இதையடுத்து நீங்கள் ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெற்றால் 15% வரி செலுத்த வேண்டும்.
5. உங்களின் வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருந்தால் 20% வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேல் பெறுபவராக இருந்தால் 30% வரியும் செலுத்த வேண்டும்.