தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி!

0
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி!

தமிழகத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்கத் தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அக மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டது.

அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளத்துடன் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – மாநில அரசு அறிவிப்பு!

அதன்படி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வுகள் நடைபெறத் தொடங்கியது. 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ம் தேதி முதல் ஆண்டு தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த இயலாது. எவ்வித குறைபாடுகளும் இன்றி காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும் என்று மாணவர்கள் உண்பதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!