தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – செப்டம்பர் 15 முதல் துவக்கம்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் - செப்டம்பர் 15 முதல் துவக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் - செப்டம்பர் 15 முதல் துவக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – செப்டம்பர் 15 முதல் துவக்கம்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 முதல் துவங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய திட்டம் அமல்படுத்த இருக்கிறது. அதாவது, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த காலை உணவு திட்டத்திற்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்பதற்கான உணவு பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, திங்கட்கிழமை ஏதாவது ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை ஏதாவது ஒரு காய்கறி கிச்சடி, புதன்கிழமை பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை உப்புமா வகைகளுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் கேசரியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி ‘தண்டோரா’ தேவையில்லை – தலைமை செயலாளர் புதிய உத்தரவு!

முதலில் சென்னையில் உள்ள மாணவர்களுக்கான காலை உணவினை அம்மா உணவகத்தில் தயார் செய்யலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. இதன் பின்னர், காலை உணவினை தயார் செய்வதற்கென்று உணவுக்கூடங்களை அமைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மட்டுமே காலை உணவு தயார் செய்ய 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து மற்ற பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலை உணவு திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!