தமிழகத்தில் இனி ‘தண்டோரா’ தேவையில்லை – தலைமை செயலாளர் புதிய உத்தரவு!
தமிழகத்தில் மக்களிடம் செய்திகளை விரைவாக சேர்க்க தண்டோரா போடும் பழக்கம் இருக்கும் நிலையில் கால மாற்றம் நிகழ்ந்துவிட்டதால் இனி தண்டோரா தேவை இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் உத்தரவு:
அந்த காலம் முதல் அரசு அறிவிப்புகள் கனமழை எச்சரிக்கைகள் என அனைத்தும் தண்டோரா போடப்பட்டு வீதி வீதியாக மக்களுக்கு தெரிவிக்கப்படும். மக்களுக்கு செய்திகளை விரைவாக சேர்க்க தண்டோரா போடும் பழக்கம் இன்னும் இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் உள்ள தெருக்களின் முனைகளில் தண்டோரா அல்லது பறை மூலம் சத்தமாக இசைத்து பின்னர் மக்களுக்கு சொல்ல வேண்டிய அறிவிப்புகளை ஊரகப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மக்களிடம் தெரிவிக்க வேண்டிய எச்சரிக்கை அறிவிப்புகள் இன்னும் தண்டோரா மூலமாக தான் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு சாதன வசதிகள் காரணமாக ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் தண்டோரா போடுகின்ற முறையானது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இன்னமும் கீழ்நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம்
இனிமேல் ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வளம் வரச் செய்வதன் மூலம் மக்களிடம் செய்திகளை தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எனவே தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. அறிவிப்பை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.