மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை துவக்கம் – நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.பார்ம், பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு:
இந்தியாவில் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்தாண்டு நீட் தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்திருந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தாண்டு NCERT பாடத்திட்டத்தை நன்றாக படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – முக்கிய ரயில்கள் ரத்து!
எப்போதும் இந்திய பொதுத் தகுதிப்பட்டியலில் பெற்றுள்ள அதிக மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. தற்போது இந்தியாவில் முழுவதும் 272 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 41388 இடங்கள் மருத்துவ படிப்புக்காக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பி.பார்ம்போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு & போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நாளை முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.