பாக்கியாவிடம் கையும் களவுமாக சிக்கிய கோபி, ராதிகா பற்றிய உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!
சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து பார்வையாளர்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சரமாரியாக கேட்ட கேள்விகளால் கோபி ஆடி போனதை குறித்து ஸ்வாரஸ்யம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி :
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமான ஒரு தொடர் தான் விஜய் டிவி பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சூறாவளி போல கதை சூடு பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் நடந்த காட்சிகள் மேலும் மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இன்று கோபி ரூமில் படுத்து கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த பாக்கியா இனியாவின் ஸ்கூலுக்கு போனீங்களா? என்று கேட்கிறார். ஆனால் கோபி பழைய பாக்கியா என்ற நினைப்பில் எப்போதும் ஏமாற்றுவது போல இல்லையே என சமாளிக்கிறார்.
கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா? பாரதியின் முடிவு! ரசிகர்கள் ஷாக்!
உடனே பாக்கியா இன்னிக்கு உங்கள என்னோட பிரெண்ட் ராஜி ஸ்கூல்ல பார்த்திருக்கா என சொல்ல என்ன என்னை வேவு பார்க்குறியா என கோபி சத்தம் போடுகிறார். மேலும், தொடர்ந்து பாக்கியவை பேசவிடாமல் தனது தப்பை மறைப்பதற்காக பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். நீ எப்போ சிபிசிஐடி போலீசா ஆன? என்ன கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க, நான் எங்க வேணாலும் போவேன் அது என்னோட இஷ்டம் என சொல்லி கத்துகிறார். உடனே பாக்கியா உங்க மேல இருந்த நம்பிக்கையே எனக்கு போயிடுச்சு என சொல்லிய கணம் கோபி ரூமை விட்டு வெளியே செல்கிறார்.
அதன் பிறகு சோகத்தில் பாக்கியா கோபியின் காரில் பார்த்த பையை குறித்து யோசித்து கொண்டிருக்க, அந்த சமயம் செல்வி அக்கா வந்து வீட்டிற்கு கிளம்புவதாக சொல்ல பாக்கியா அமைதியாக நிற்க செல்வி என்ன? ஏது? எனக் கேட்டு இப்படியே அமைதியா இருந்தா சார் உன்ன கொட்டி கிட்டே தான் இருப்பாரு, அநியாயம் எங்கே நடந்தாலும் அதை தட்டிக் கேட்கனும் வாய மூடிட்டு இருக்க கூடாது என கூறுகிறார். அதனால் பாக்கியாவும் மீண்டும் கோபியின் ரூமுக்கு சென்று இது உங்க கார்ல இருந்து எடுத்தேன் என ஒரு மருந்துச் சீட்டை கொடுக்கிறார். அதற்கு கோபி அப்பாவுக்கு வாங்குன மருந்து சீட்டா இருக்கும் என கூறுகிறார்.
உடனே பாக்கியா அப்படியா? அப்போ கேட்டப்போ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரோட குழந்தைக்கு வாங்கிய மெடிசன் அப்படின்னு சொன்னீங்க என சொல்ல கோபி கோபத்தில் அதான் அப்போவே சொல்லிட்டேன்ல அப்றம் என்ன சும்மா ஏதாச்சு கேள்வி கேட்டுட்டே இருக்க என்று சொல்லி எரிச்சலாக பேசுகிறார். பிறகு ஜாக்கெட் பில்லை கொடுத்து இது யாருக்கு உங்க ஆபீஸ்ல இருக்கவங்க யாருக்காவது தச்சு கொடுத்தீங்களா என கேட்க கோபி ஒரு கணம் ஆடி போய் பாக்கியாவை ஷாக்கிங்கோடே பார்க்கிறார்.
Exams Daily Mobile App Download
மேலும் கோபியை பேச விடாமல் பாக்கியா என் வாழ்க்கையில என்னதான் நடக்குது? நைட்ல யார்கிட்ட டார்லிங், செல்லமேனு பேசிகிட்டு இருக்கீங்க? இப்படிதான் பேசுவீங்களா?? உங்களுக்கு என்னதான் புடிக்கலைனு தெரியும் ஆனாலும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா முன்னோடியா இருப்பீங்கனு நினைச்சேன் ஆனா இப்போ அந்த நம்பிக்கை எல்லாமே போச்சு என்று சொல்வதுடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது