ராதிகா திருமணம் செய்ய இருப்பவரை சந்திக்க நினைக்கும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என கோபி சொல்ல ராதிகாவின் முயற்சியால் மீண்டும் பாக்கியா தொழிலை தொடங்க இருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவிற்கு ராதிகாவை திருமணம் செய்ய இருப்பவர் தான் தொழில் தொடங்க காரணம் என தெரிய அதனால் பாக்கியா அவரிடம் நன்றி சொல்ல வேண்டும் என வருகிறார். இதெல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என சொல்ல அதனால் பாக்கியா அலுவலகத்தை மூடிவிட்டு கண்ணீருடன் வருகிறார். அதன் பின் பாக்கியாவை சந்தித்து வருத்தப்பட்டு பேச அதனால் ராதிகாவுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் ராதிகா பாக்கியாவின் கணவரிடம் பேச வேண்டும் என கோபியிடம் சொல்ல மாட்டிக் கொண்டோம் என நினைத்த கோபி நானே பேசுகிறேன் என சொல்கிறார்.
கோபி பணம் சம்பாரிக்கவில்லை என குறை சொல்லும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் திடீர் திருப்பம்!
பின் வீட்டிற்கு வந்த கோபி பாக்கியாவிடம் நன்றாக யோசித்து பார்த்தேன் நீ இனிமேல் தொழில் செய்யலாம் என சொல்கிறார். நானும் தான் தொழில் செய்கிறேன் பல பிரச்சனைகள் வருகிறது அது போல தான் இதுவும் என கோபி சொல்ல பாக்கியாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் ராதிகா திருமணம் செய்ய இருபவரால் தான் கோபி மனம் திருந்திவிட்டார் என்பது தெரிந்து பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதனால் பாக்கியா ராதிகா திருமணம் செய்ய இருப்பவரை பார்க்க நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
அது பற்றி ராதிகாவிடம் பேச பாக்கியா உங்களை திருமணம் செய்பவரை நான் பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் அவரிடம் நான் நன்றி சொல்ல வேண்டும் என சொல்ல ராதிகா அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோபி வசமாக சிக்க போகிறார். இவை எல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் கோபியின் மனைவி பாக்கியா தான் என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிந்த பின் கதையில் மிக பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.