கோபி பணம் சம்பாரிக்கவில்லை என குறை சொல்லும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி முதலில் பாக்கியாவை தொழில் செய்ய வேண்டாம் என சொல்ல அதை நினைத்து பாக்கியா வருத்தப்படுகிறார். இந்நிலையில் ராதிகாவின் பேச்சை கேட்டு கோபி பாக்கியாவை தொழில் செய்ய சொல்கிறார். அடுத்து வர போகும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. பாக்கியா தொழிலில் பெரிய பிரச்சனை ஒன்று வர அதில் இருந்து எந்த தவறும் செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டு பாக்கியா வெளியே வருகிறார். இந்நிலையில் பாக்கியா அடிக்கடி பிரச்சனைகளில் சிக்குவதால் கோபி இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என சொல்லிவிடுகிறார். அதனால் பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். ஆசையாக தொடங்கிய அலுவலகத்தை மூடி விடுகிறார்.
Exams Daily Mobile App Download
அது பற்றி ராதிகாவிடம் சொல்லி வருத்தப்பட கோபியை அனுப்பி பாக்கியாவின் கணவரிடம் பேச சொல்கிறார். அதனால் வேற வழியில்லாமல் கோபி பாக்கியாவை மீண்டும் தொழில் தொடங்க சொல்கிறார். கோபியின் இந்த மாற்றத்தால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் கோபி தொழில் தொடங்க சொன்னதை நினைத்து அவருக்கு சந்தோசமாக இருக்கிறது. மறுபக்கம் அமிர்தா எழில் மீது காதல் வசப்படுகிறார். ஆனால் அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
தனது மகனுக்காக இரவும், பகலும் தூங்காமல் அவதிப்படும் ஆலியா மனசா – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் இனி வர போகும் எபிசோடுகளில் கோபி அலுவலக வேலைகளை சரியாக செய்யாமல் எந்த நேரமும் ராதிகா வீட்டில் இருப்பதால் பண கஷ்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் ராதிகா அடிக்கடி பணம் கொடுத்து கோபிக்கு உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவிடம் பணம் இல்லாமல் போக கோபியை குறை சொல்ல தொடங்குகிறார். நான் சம்பாரிக்கும் அளவு கூட உங்களால் சம்பாரிக்க முடியவில்லை என குறை சொல்லி பேச கோபிக்கும் ராதிகாவுக்கு இடையே சண்டை வருகிறது இதெல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.