விவாகரத்து உண்மையை தெரிந்து கொண்டு கோபியை கண்டபடி அறைந்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
பல நாட்களாக மறைத்து வைத்திருந்த விவாகரத்து செய்தியை பாக்கியா அறிந்துகொள்வது போலவும், கோவத்தில் கோபியை கண்டபடி அறையும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஜெனியை செழியன் விவாகரத்து செய்யப் போகிறேன் என கூறியதற்கே பாக்கியா பயங்கரமாக கோவப்பட்டார். கோபி விவாகரத்து செய்ய போகிற விஷயத்தை தெரிந்த பின்பு பாக்கியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.
சன் டிவி “அன்பே வா” சீரியல் வில்லி சுப்புலட்சுமி ரங்கன் திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒவ்வொரு நாளும் பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து கோபி தப்பித்துக்கொண்டே தான் இருக்கிறார். கண்ணுக்கு முன்னாடி தவறு செய்தும் கூட கோபியை பாக்கியா நம்பிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் எழில் கோபி வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து நொந்து போகிறார். பாக்கியாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகும் என பயந்து ராமமூர்த்தி தாத்தாவிடம் நடந்ததை கூறுகிறார். இதற்கு மேலும், பொறுமையாக இருக்க முடியாது என தாத்தாவும் உண்மையை கூற கிளம்பினார்.
அப்போது கூட கோபி மாட்டவில்லை. கோபிக்கு ஏற்றவாறு இனியாவும் சப்போர்ட்டாக இருக்கிறார். அதாவது நான் உனது அம்மாவை விட்டு பிரிந்து விட்டால் நீ யாரின் பக்கம் இருப்பாய் என கேட்கிறார். அதற்கு நான் கண்டிப்பாக உங்களின் பக்கம் தான் இருப்பேன் என இனியா கூறுகிறார். இந்த உண்மைகள் அனைத்தும் எப்போது வெளியே வரும் என்பது தான் புரியவில்லை. கோபிக்காக ராதிகாவையே பாக்கியா திருமணம் செய்து வைப்பாரா அல்லது கோபிக்கு ரெண்டு அரை அறைந்து விட்டு வீட்டில் உக்கார வைக்க போகிறாரா என்பதை பார்க்கலாம்.