ராமமூர்த்தி தாத்தாவை கொலை செய்யும் கோபி, பார்த்து விடும் கதிர் – சீரியலில் அடுத்த திருப்பம்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கோபியை பற்றிய உண்மையை ராமமூர்த்தி தாத்தா கூறி விடுவாரோ என பயந்து கோபி ராமமூர்த்தி தாத்தாவை கொலை செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபியின் உண்மையான முகம் பாக்கியாவிற்கு எப்போது தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராமமூர்த்தி தாத்தாவின் 75வது பிறந்த நாளிற்காக பாக்கியாவின் வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருகிறார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என கோபி பதட்டத்தில் இருக்கிறார்.
பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் பிறந்த நாள் விழாவில் ராதிகாவையும் கலந்து கொள்ளுமாறு பாக்கியா அழைத்திருக்கிறார். ராதிகாவும் தனது வருங்கால கணவரை கண்டிப்பாக கூட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு நடுவே ராமமூர்த்தி தாத்தாவிற்கு தான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ஏற்கனவே தெரியும். குடும்பத்தினரிடம் உண்மையை கூறி விடுவேன் என அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதிகாவிடம் கோபி போனில் பேசிக் கொண்டிருப்பதை கதிர் கேட்டு விடுகிறார். ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ள போகிறாரா என்கிற சந்தேகம் கதிருக்கு வருகிறது.
Exams Daily Mobile App Download
ராமமூர்த்தி தாத்தா எப்படியும் இந்த பிறந்தநாள் விழாவில் கோபியை பற்றிய உண்மையை அனைவரிடமும் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும் என கோபி முடிவு செய்கிறார். எதற்காக தன்னுடைய அப்பாவிற்கு பயந்து பயந்து வாழ வேண்டும் என நினைத்து ராமமூர்த்தி தாத்தாவை கோபி கொலை செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. கோபி ராமமூர்த்தி தாத்தாவை கொலை செய்வதை கதிர் பார்த்துவிடுகிறார்.