Vijay TV Bigg Boss 5 Promo | நிரூப்பிற்கு பின் விளைவுகள் கடுமையாக இருக்கும், எச்சரித்த கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கி உள்ள நிலையில், இன்றைய எபிசோடில் நடிகர் கமல் ப்ரியங்கா நிரூப் சண்டை பற்றி பேசும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் 18 போட்டியாளர்கள் ஒரே வீட்டிற்குள் அனுப்பப்பட்டு அவர்களுக்கு வெளி உலகமே தெரியாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பல டாஸ்குகள் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெற்று மக்கள் மனதை வென்ற போட்டியாளர் தான் கடைசி வரை அந்த வீட்டில் பயணம் செய்ய முடியும். அதில் வாரந்தோறும் வெளியேற்ற வேண்டிய போட்டியாளர்களை மக்கள் தேர்வு செய்வார்கள்.
ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ – குவியும் லைக்குகள்!
அந்த வகையில் வாரந்தோறும் பலர் வெளியேறி டாப் 10 போட்டியாளர்கள் தற்போது இருக்கின்றனர். அவர்களில் இந்த வாரம் வெளியேற போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். நடிகர் கமல் வாராவாரம் சொல்லும் அறிவுரைகளை கேட்டு போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இறுதி சுற்றிற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இனிமேல் போட்டிகள் கடுமையாக்கப்படும்.
பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் – “பாரதி கண்ணம்மா” ரோஷினி ஓபன் டாக்!
அதனால் இன்றைய எபிசோடில் கமல் அனைவரின் தப்பை தட்டி கேட்க இருப்பதாக தெரிவித்தார். அவர் இப்போது வெளியான ப்ரோமோவில் பிரியங்கா நிரூப் பற்றி பேசி இருக்கிறார். நிரூப் கயிறை இரவெல்லாம் பிடித்திருந்தீங்க ஏன் திடீரென விட்டீங்க என கேட்க, நீ தலைவராக கூடாது என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் அதனால் தான் விட்டேன் என நிரூப் சொல்ல, பெண்கள் இங்கே இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என அவன் சொன்னதால் தான் நான் அப்படி செய்தேன் என பிரியங்கா சொல்ல, நிரூப் நீங்க பயன்படுத்திய வார்த்தை காரணமாக பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கிறார்.