Vijay TV Bigg Boss 5 | தலைவர் நிரூப் பேச்சை மதிக்காத போட்டியாளர்கள், பழிவாங்கும் திட்டமா? ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தற்போது ஒன்பதாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வார தலைவராக நிரூப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது எட்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின் போட்டியாளர்களில் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று ஐக்கி பெரி வெளியேறினார். இந்நிலையில் இந்த வார தலைவர் போட்டி நடத்தப்பட்டது. அதில் அண்ணாச்சி வெற்றி பெற்று தலைவரானார்.
கண்ணம்மா வீட்டில் ‘சாப்பிட மாட்டேன்’ என பிடிவாதம் செய்யும் பாரதி – சீரியலில் அடுத்த எபிசோட்!
ஆனால் நிரூப் தன்னுடைய நாணயத்தின் உதவியால் தலைவரானார். அதை பார்த்ததும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் அண்ணாச்சி கோவப்பட்டு நீ பயந்துட்ட என சொல்ல, நிரூப் தலைவரானதும் போட்டியாளர்களுக்கு வேலையை பிரித்துக் கொடுக்கிறார். ஆனால் நீ சொல்ற வேலை எல்லாம் செய்ய முடியாது என சொல்கிறார். நான் தலைவர் நான் சொல்வதை எல்லாரும் செய்ய வேண்டும் என நிரூப் சொல்ல முடியாது என அண்ணாச்சி சொல்கிறார்.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் சரஸ்வதியின் அப்பா, தமிழின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!
பின் நிரூப் பிக்பாஸ் நான் சொல்வதை கேட்காமல் இருந்தால் என்ன செய்வது என கேட்கிறார். அபிஷேக் என்னுடைய நாணயத்தை வைத்திருப்பதால் அவர் பெட்ரூம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தலாம் என நிரூப் சொல்கிறார். நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என வருண் சொல்ல, கேட்டு தான் ஆக வேண்டும் என நிரூப் சொல்கிறார். நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது செய்வதை செய்து கொள் என அண்ணாச்சி சொல்ல இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. அனைவரும் தலைவராக இருக்கும் போது நிரூப் கேட்க மாட்டார். ஆனால் அவர் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும் என வேண்டுமென்றே அண்ணாச்சி செய்வது போல இருக்கிறது.