திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் சரஸ்வதியின் அப்பா, தமிழின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், வசு மகாபலிபுரத்தில் நடந்தது பற்றி தமிழிற்கு தெரிந்து விட்டது என சந்திரகலாவிடம் பேசுகிறார். பின் சரஸ்வதி அப்பா வாத்தியார் பெரிய வீட்டு பையனை உங்க மகள் மயக்கிட்டால் என பேசுவதால் எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என சொல்கிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழ் வசு பற்றி சரஸ்வதியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பின் சரஸ்வதி நீங்க பக்கத்தில் இருக்கும் போது எதுவும் பிரச்சனை இல்லை என சொல்கிறார். பின் வசு சந்திரகலாவிடம் தமிழிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது என சொல்கிறார். சந்திரகலா நீ ஏன் ஒப்புக் கொண்டாய், அவர் சொன்னால் நான் அப்படி செய்யவில்லை என உறுதியாக நின்றுக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் தமிழ் கோவமாக கேட்டதால் நான் உண்மையை சொல்லிவிட்டேன் என சொல்கிறார். பின் சந்திரகலா சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.
பிரசவத்துக்கு பின்பு ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா வெளியிட்ட முதல் பதிவு – வைரலாகும் புகைப்படம்!
அப்போது கோதையின் அண்ணி வர சந்திரகலாவிடம் என்ன பேசிக் கொண்டு இருக்கீங்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி அவர் சமாளிக்க என்னிடமே பொய் சொல்கிறாய் என கோதை அண்ணி கோபப்படுகிறார். அப்போது தமிழ் வர என்னை நம்பாமல் இருந்த இப்போது உண்மை எல்லாம் தெரிந்துவிட்டதா என கேட்கிறார். தமிழ் இது பற்றி யாரிடமும் சொல்லாதீங்க என சொல்கிறார். பின் சரஸ்வதி அப்பா வர ஸ்கூலில் அனைவரும் பேசியது பற்றி நினைத்து பார்க்கிறார். அவர் உள்ளே வந்ததும் தமிழ் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்பதாக சொன்னார் ஆனால் இன்னும் வரவில்லை என அதனால் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என சொல்கிறார்.
அதை கேட்டு சரஸ்வதி அதிர்ச்சி அடைய கோபத்துடன் பாட்டி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், நினைத்து நினைத்து பேச இது என்ன சாதாரண விஷயம் என நினைக்கிறியா என்று சத்தம் போட வாத்தியார் எல்லாரும் என்னை குத்திக்காட்டுவது போல பேசுறாங்க, உன் மகளுக்கு படிப்பு வராமல் இருந்தாலும் இது மட்டும் நன்றாக வருகிறது என பேசுறாங்க, நம்ம வசதிக்கு இவ்வளவு பெரிய இடமா என கேலி செய்கிறார்கள்.
விஜய் டிவியில் புதிதாக களமிறக்கப்படும் 2 நிகழ்ச்சிகள் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் குஷி!
அதனால் வேண்டாம் என சொன்னேன் என சொல்ல, பாட்டி அடுத்தவன் பேசுறது இருக்கட்டும் அதற்காக நீ இந்த முடிவு எடுத்தது தவறு என சொல்ல, அவங்களே ஒரு நாள் இதை சொல்லி காட்டுவார்கள் என சொல்கிறார். சரஸ்வதி அவங்க ஒருநாளும் அப்படி பேசமாட்டார்கள் என சொல்ல, வருகிற வெள்ளிக்கிழமை பெண் கேட்டு வருவதாக சொன்னார்கள் என சொல்கிறார். சரஸ்வதி அப்பாவும் சரி என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.