கண்ணம்மாவை ஏற்றுக்கொண்ட பாரதி? விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

0
கண்ணம்மாவை ஏற்றுக்கொண்ட பாரதி? விரைவில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல்! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மாவை ஏற்றுக்கொண்ட பாரதி? விரைவில் முடிவுக்கு வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல்! ரசிகர்கள் ஷாக்!
கண்ணம்மாவை ஏற்றுக்கொண்ட பாரதி? விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நீதி காத்த அம்மன் கோவிலில் வைத்து கண்ணம்மாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க, பாரதி அதனை ஏற்றுக்கொண்டவுடன் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. சமீப காலமாக பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் சில எதிர்பாராத ட்விஸ்டுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக 10 வருடங்கள் கழித்து பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ சம்மதிக்க, வெண்பா ஜெயிலுக்கு செல்ல, பாரதியின் மனமாற்றம், பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே ஏற்படும் நெருக்கம் என மக்களின் விருப்பதிக்கேற்ற கதைக்களங்களுடன் இந்த சீரியல் வெளியாகி கொண்டிருக்கிறது.

ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

அதிலும் குறிப்பாக சாமியாரை சந்தித்த பின்னர் பாரதியின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் நிகழ்கிறது. மறுபக்கத்தில் வெண்பாவின் சூழ்ச்சி அனைத்தும் பாரதிக்கு தெரிய வந்து, அவரை விட்டு விலகி செல்கிறார். இது போன்ற கதைக்களங்களால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். இப்படி இருக்க கண்ணம்மா மீதுள்ள உண்மையை அறிந்துகொள்ள அவரை கோவிலுக்கு அழைத்து செல்லும் பாரதி இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இது குறித்த விவரம் எதுவும் தெரியாத கண்ணம்மா, நீதி காத்த அம்மன் கோவிலில் பொங்கல் வைப்பது எதற்கென்று ஒரு பாட்டி மூலம் தெரிந்து கொள்கிறார். இப்போது இவர்கள் இருவரும் பொங்கல் வைத்து முடிக்க கண்ணம்மாவின் பொங்கல் முதலாவதாக பொங்குகிறது. இதனால் பாரதி சற்று அதிர்ச்சியாகிறார். இதனை தொடர்ந்து கண்ணம்மா மீதுள்ள தன்னுடைய எண்ணம் தவறானது என்பதை பாரதி புரிந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பயோமெட்ரிக் முறை! பொதுமக்கள் அச்சம்!

இப்படி நடந்தால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வந்துவிடுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களத்தில் DNA டெஸ்ட் மட்டும் மீதமிருக்கும் நிலையில் அதுவும் எடுக்கப்பட்டால், சீரியல் முடிவடைந்து விடும் என்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர். என்றாலும் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிக்க கூடிய சீரியல் இப்படி திடீரென முடிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், பொங்கல் பண்டிகைக்காக ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களத்தில் இது போன்ற காட்சிகள் இடம்பிடித்திருப்பதாகவும் வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!