வெண்பாவிற்காக மாயாண்டியை அடித்து நொறுக்கிய சாரதி – ட்விஸ்டுகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!
விஜய் டிவி சீரியல்கள் லிஸ்டில் மிகவும் டல் அடித்து கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரின் கதையை இயக்குனர் அவர்கள் கொஞ்சம் மெருகேற்றி வருவது போல் தெரிகிறது. அவ்விதமாக இன்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒரே கதையை வைத்து பல மாதங்கள் ஓட்டி பல விமர்சனங்களை சந்தித்து வந்த தொடர் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடர் தான். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து வந்த இந்த சீரியல் கடந்த சில நாட்களாகவே மிகவும் கீழ் தள்ளப்பட்ட ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் தொடரின் இயக்குனர் தற்போது வரக்கூடிய எபிசோடுகளில் புது புது சுவாரஸ்யங்களை கொடுத்து கதைக்களத்தை மாற்ற ரெடியாக இருக்கிறார் போல் தெரிகிறது. ஒரு பக்கம் குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமியை கொண்டு புது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இன்னொரு பக்கம் வெண்பாவின் அம்மாவாக வந்திருக்கும் ரேகாவின் என்ட்ரி மற்றும் வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வந்திருக்கும் சபரியின் அட்ராசிட்டிகள் சீரியலை பார்க்க தூண்டும் விதமாக கதையை காமெடி ட்ராக்காகவும் கொண்டு செல்கிறார். அவ்விதமாக கடந்த எபிசோட்டில் பாரதியை சந்தித்த நிகழ்வை ரோஹித் அவனது அத்தை ஷர்மிளாவிடம் சொல்ல, அதனால் எப்படியாவது கூடிய விரைவில் வெண்பாவுக்கும், சாரதிக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என நினைத்ததை போலவே இன்று எபிசோடில் வெண்பா திருமணம் குறித்ததான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் களமிறங்கும் சஞ்சீவ் & ஆலியா ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
அவ்விதமாக ஷர்மிளா, பாரதியின் அம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து வெண்பா, சாரதி திருமணத்திற்கு அழைக்கிறார். உடனே சௌந்தர்யாவும் கண்டிப்பாக நான் வராமல் எப்படி என சொல்லி இருவரும் பேசி கொள்கின்றனர். இந்த பக்கம் மாயாண்டி மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். அதாவது, வெண்பாவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிக்கு மத்தியில் மாயாண்டி போன் செய்து வெண்பா எப்படி இருக்க என கேட்க, வெண்பா ஷாக் ஆகிறார். உடனே மாயாண்டி, வெண்பாவிடம் உங்க கல்யாணம் பத்தி கேள்வி பட்டேன், எனக்கு இன்னும் செட்டில் பண்ண வேண்டிய பணத்தை எப்போ கொடுக்க போற? என காசு கேட்டு மிரட்டுகிறார். இதனால் என்ன செய்வதென புரியாமல் வெண்பா கவலையில் இருக்கிறார். அதன் பிறகு புது விதமாக சாரதி மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து மாயாண்டியை அடித்து வெண்பாவுக்கு முன் நிறுத்தினார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.