விவாகரத்து விஷயத்தில் கண்ணம்மாவை ஏமாற்றிய பாரதி – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவிற்கு பாரதி விவாகரத்து கொடுக்க இருப்பது தெரிந்து அதனால் ஹேமா அழுது பாரதியை விவாகரத்து வாங்காமல் சத்தியம் வாங்குகிறார். அதை நினைத்து கண்ணம்மாவும் லக்ஷ்மியும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் இனி வரும் எபிசோடுகளில் பெரிய திருப்பம் வர இருக்கிறது
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை வைத்தே சென்ற வார எபிசோடுகளில் காட்டப்பட்டது. வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என சர்மிளா அமெரிக்காவில் இருந்து வர மாப்பிள்ளை பார்க்கும் வேலைகள் எல்லாம் தீவிரமாக நடந்தது. அதனால் வெண்பா திருமணம் முடிந்து கதையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. வெண்பாவிற்கு ரோஹித் சாரதி என்ற மாப்பிள்ளையை சர்மிளா பார்த்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
வெண்பா பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்த பின் கூட ரோஹித் வெண்பாவை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்காமல் ஷர்மிளா அமெரிக்கா சென்றுவிட்டதால் கதையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். அந்த விஷயத்தை தெரிந்து கொண்டு ஹேமா யாரை திருமணம் செய்ய இருக்கீங்க என பாரதியிடம் அடிக்கடி கேட்டு வருகிறார்.
அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், PF & வேலை நேரம் மாற்றம் – ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் குறியீடு அமல்!
பாரதி சொல்லாமல் இருக்க ஹேமா விவாகரத்து வேண்டாம் என அழுது புலம்புகிறார். அதனால் பாரதி வேறு வழியில்லாமல் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என சத்தியம் செய்கிறார். அதை நினைத்து கண்ணம்மாவும் லக்ஷ்மியும் சந்தோசமாக இருக்கின்றனர். மறுபக்கம் கண்ணம்மா பாரதிக்கு நன்றி சொல்கிறார். ஆனால் இனி வரும் எபிசோடுகளில் பாரதி அமைதியாக இருந்து விவாகரத்து வேலைகளை பார்க்க இருக்கிறார். பாரதியை முழுமையாக நம்பி இருக்கும் கண்ணம்மாவிற்கு பெரிய சோகமாக இருக்க போகிறது.