அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், PF & வேலை நேரம் மாற்றம் – ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் குறியீடு அமல்!

0
அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், PF & வேலை நேரம் மாற்றம் - ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் குறியீடு அமல்!
அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம், PF & வேலை நேரம் மாற்றம் – ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் குறியீடு அமல்!

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய தொழிலாளர் குறியீடு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் வேலை நேரம், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது.

புதிய தொழிலாளர் குறியீடு

பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நாளைக்கு சுமார் 8 மணிநேரம் வரை பணியாற்றுவது உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் IT நிறுவனங்களில் ஊழியர்களின் வேலை நேரம் கொஞ்சம் கூடுதலாக காணப்படும். இது சிலருக்கு அசவுகரியங்களையும் ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அலுவலக ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான வேலை நேரம், விடுமுறை ஆகியவற்றில் மாற்றங்களை அமல்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய தொழிலாளர் குறியீடு என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் உதவியாளர் & கிளெர்க் வேலை – ஆண்களுக்கு முன்னுரிமை..!

இந்த புதிய தொழிலாளர் குறியீடு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. என்றாலும் புதிய குறியீடுகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுவரை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே நான்கு தொழிலாளர் குறியீடுகளின் விதிகளை வகுக்கவில்லை. மறுபக்கத்தில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே ஊதியக் குறியீட்டின் கீழ் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இப்போது புதிய குறியீடு கொள்கை நடைமுறைக்கு வரும் போது அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்பதை காணலாம்.

அந்த வகையில் முதலாவதாக இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவர் வாரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வேலை நாட்களை பெற உள்ளனர். அதாவது, ஒரு முதலாளி தங்கள் ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்களுக்கு மட்டும் வேலை செய்ய அனுமதிக்கலாம். இந்த முறையில் அவர்கள் வேலை நேரத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காண்பார்கள். இப்போது புதிய ஊதியக் குறியீடு 48 மணி நேர வேலை வாரத்தை கட்டாயமாக்குகிறது. எனவே, தினசரி வேலை நேரங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

தற்போது, ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் வேலை செய்யும் ஊழியர்கள், 4 நாள் வாரத்தை தேர்வு செய்ய விரும்பினால் இதை 12 மணி நேர ஷிப்டாக அதிகரிக்க வேண்டும். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் புதிய தொழிலாளர் விதிகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது புதிய தொழிலாளர் குறியீட்டின் கீழ், ஒரு பணியாளரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அதிகரிக்கும்.

அந்த வகையில் ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் அவர்களின் மொத்த மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன. இதனால் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் வழங்கும் பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும். மேலும் இது பணியாளரின் ஓய்வூதியத் தொகை மற்றும் பணிக்கொடைத் தொகையை உயர்த்தும். இந்த PF பங்களிப்பின் அதிகரிப்பின் விளைவாக, பணியாளரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் பாதிக்கப்படும். இது தவிர புதிய தொழிலாளர் குறியீடு மூலம் ஊழியர்களின் விடுமுறைகளிலும் பெரிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!