‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வரும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நாளைய எபிசோடை தொகுத்து வழங்கும் நடுவர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நடுவர்:
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் கடந்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளை போல இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட வார இறுதியில் கமலை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த சீசனில் ஏழு வாரம் முடிவடைந்து ஏழு பேர் வெளியேறி இருக்கின்றனர்.
உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
தற்போது எட்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை நடிகர் கமல்ஹாசனிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படும் என பல வதந்திகள் கிளம்பியது. ஆனால் தொடர்ந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாளைய எபிசோடில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்!
அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற செய்தி கசிந்துள்ளது. அவர் ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அப்பவே அவர் வனிதாவை நேருக்கு நேராக எதிர்த்து நின்றவர். தற்போது அவர் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் எப்படி கேள்வி கேட்பார் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே இவர் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.