விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயின் முதல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயின் முதல் பதிவு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயின் முதல் பதிவு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயின் முதல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அபிநய் தனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்திற்கு நன்றி கூறி முதன் முதலாக வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் அபிநய்

இதுவரை சுமார் 75 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’ சீசன் 5. வழக்கம் போல மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பிரமாண்டமாக துவங்கப்பட்ட இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இப்போது ஒரு சிலரே இந்த போட்டியில் இடம் பிடித்துள்ளனர்.

Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அந்த வகையில் கடந்த வாரத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து அபிநய் என்பவர் வெளியேற்றப்பட்டார். ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக நாமினேட் செய்யப்பட்டு கடைசியாக காப்பாற்றப்பட்டு வந்த போட்டியாளர் அபிநய், கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது மக்கள் தனக்கு கொடுத்து வந்த ஆதரவுக்காக நன்றி கூறி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் அபிநய்.

அந்த பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். உண்மையில் என்னை பிடித்தவர்களுடன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 78 நாட்கள் நீடித்த பிக்பாஸ் பயணத்தில் நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. நிகழ்ச்சியின் கலந்து கொண்டது, குறிப்பாக கமல் சார் தொகுத்து வழங்கியதை பார்த்த அனுபவம் ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாணயத்திற்கும், வாழ்க்கைக்கும் எப்போதும் இரு பக்கங்கள் இருக்கும். அது எப்போதும் நீங்கள் என்ன தேர்வு செய்கிறீர்கள், எந்தப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்தது போல் அதிர்ஷ்டம் ஒருபோதும் எனக்கு சாதகமாக இல்லை. ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் எனக்கு ஒரு அன்பான குடும்பம் உள்ளது. நான் தவறாக மதிப்பிடப்பட்ட மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. ஆனால் நாளின் முடிவில் இது ஒரு கேம் ஷோ என்பது புரிந்திருக்கிறது. வாழ்க்கை, எப்போதும் பலவற்றை கற்றுக்கொடுத்து உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது. இவை நேர்மறையான வழியில் என்னை பயணிக்க வைக்கிறது. எனது எதிர்காலத்தை எனது குடும்பத்திற்கும், நான் விரும்பும் அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற விரும்புகிறேன்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க இருந்த இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி? வைரலாகும் ஃபன் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் எனது பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு ஆதரவாக நின்ற எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிக்பாஸ் பயணத்தில் என்னை ஆதரித்த, என்னை உற்சாகப்படுத்திய, எனக்காக வாக்களித்த மற்றும் மிக முக்கியமாக என் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டீர்கள். இது இன்னும் பல நல்ல மற்றும் நேர்மறையான விஷயங்களுக்கு ஒரு தொடக்கமாகும்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!