பாரதியை வெறுப்பதாக சொன்ன வெண்பா, கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் விக்ரம் – இன்றைய எபிசோட்!

0
பாரதியை வெறுப்பதாக சொன்ன வெண்பா, கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் விக்ரம் - இன்றைய எபிசோட்!
பாரதியை வெறுப்பதாக சொன்ன வெண்பா, கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் விக்ரம் - இன்றைய எபிசோட்!
பாரதியை வெறுப்பதாக சொன்ன வெண்பா, கண்ணம்மாவை நினைத்து பெருமைப்படும் விக்ரம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதி நடந்து கொள்வதை நினைத்து கோவமாக இருக்கிறார். பாரதியிடம் வந்து நான் உன்னை வெறுக்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா மருத்துவமனையில் எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ள விக்ரம் கண்ணம்மாவை பற்றி வேணுவிடம் பெருமையாக பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மா வருத்தப்பட்டு சாமி கும்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து வருத்தப்படுகிறாள். பின் கண்ணம்மாவிடம் சென்று இன்னும் கிளம்பவில்லையா என கேட்க அப்போது கண்ணம்மா இதோ கிளம்பிவிட்டேன் என சொல்கிறார். இன்னும் தலை கூட சீவவில்லையா என சொல்லிவிட்டு லட்சுமி தலை சீவி விடுகிறார். பின் கண்ணம்மாவிற்கு மேக்கப் போட நீ எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என லட்சுமி சொல்ல கண்ணம்மாவிற்கு பெருமையாக இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் பாரதியை நினைத்து வெண்பா வருத்தத்துடன் இருக்கிறார். அப்போது சாந்தி வந்து பேச பாரதி உங்களை காதலித்தது எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஏன் அவர் உங்க அம்மா வந்து பேசியதை நினைத்து கோவப்பட்டார். மேலும் பாரதி உங்களுடைய ஆபத்து நேரத்தில் கூட வராமல் இருக்கிறார். அவர் செய்வதை எல்லாம் பார்த்தால் உங்க அம்மா சொல்வது தான் சரி என தோன்றுவதாக சாந்தி சொல்ல, கோவப்பட்ட வெண்பா கிளம்பி செல்கிறார்.

மறுபக்கம் பாரதி ஹேமாவை கிளம்ப சொல்லிவிட்டு வெளியே சென்று நிற்கிறார். அப்போது வெண்பா கார் வேகமாக வருகிறது. பாரதி வெண்பாவை பார்த்துவிட்டு வா வெண்பா என சொல்ல ஆனால் கோவமாக வந்த வெண்பா நான் கஷ்டப்படும் போது என்னை பார்க்க வர வேண்டும் என உனக்கு தோன்றவில்லை. உனக்கு கஷ்டம் என்றால் மட்டும் நான் உன்னுடன் இருக்க வேண்டும் என சொல்கிறார். நீ எல்லாம் ஒரு நண்பனா என சொல்ல பாரதி நான் வர வேண்டும் என நினைத்தேன் ஆனால் அங்கே நிகழ்ச்சி நடந்தது நீ கேஸில் இருந்து வெளியே வந்துவிட்டாய் என கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம் என சொல்கிறார் .

மே மாதம் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!

ஆனால் வெண்பா கோவமாக இனிமேல் உன் முகத்தை கூட நான் பார்க்க விரும்பவில்லை என வெண்பா சொல்கிறார். பின் பாரதியிடம் நான் உன்னை வெறுக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு பாரதி கோவமாக இருக்க அப்போது ஹேமா வருகிறார். வெண்பா பேசியதை நினைத்து பாரதி ஹேமா மீது கோவத்தை காட்ட உடனே ஹேமா கோவித்து கொள்கிறார். அதனால் ஹேமா வெண்பா வந்தாலே பிரச்சனை தான் வருகிறது இனிமேல் அவரை வரவே விடாமல் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பின் கண்ணம்மா மருத்துவமனைக்கு செல்ல அங்கே எல்லாரிடமும் அக்கறையுடன் பேசுகிறார். உள்ளே நுழைந்தது முதல் எல்லாருக்கும் வணக்கம் சொல்ல பெண் ஒருவர் தன்னுடைய மகள் பள்ளிக்கு போக வேண்டும் என சொல்ல கண்டிப்பாக போங்க என சொல்வது வேலையாட்கள் முதல் நோயாளிகள் வரை பாசமாக கண்ணம்மா கவனித்து கொள்கிறார். விக்ரம் கண்ணம்மாவை கவனித்துவிட்டு வேணுவிற்கு போன் செய்து பாராட்டி பேசுகிறார். அதை நினைத்து வேணு மிகவும் சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!