வெண்பா பாரதியை மறக்க ஷர்மிளா சொன்ன கண்டிஷன், சௌந்தர்யா பாரதிக்கு சொன்ன அறிவுரை – இன்றைய எபிசோட்!

0
வெண்பா பாரதியை மறக்க ஷர்மிளா சொன்ன கண்டிஷன், சௌந்தர்யா பாரதிக்கு சொன்ன அறிவுரை - இன்றைய எபிசோட்!
வெண்பா பாரதியை மறக்க ஷர்மிளா சொன்ன கண்டிஷன், சௌந்தர்யா பாரதிக்கு சொன்ன அறிவுரை - இன்றைய எபிசோட்!
வெண்பா பாரதியை மறக்க ஷர்மிளா சொன்ன கண்டிஷன், சௌந்தர்யா பாரதிக்கு சொன்ன அறிவுரை – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா இதோடு பாரதியை மறந்துவிட வேண்டும் என ஷர்மிளா பல வேலைகளை செய்கிறார். பின் லட்சுமி பாரதியை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் சௌந்தர்யா பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதியை நினைத்து வருத்தப்பட்டு அழ அப்போது ஷர்மிளா வந்து இப்படியே அழுது பாரதியின் எல்லா நினைவுகளையும் மறந்துவிட வேண்டும் என சொல்கிறார். பின் சாந்தியிடம் சொல்லி பாரதி நினைவாக இருக்கும் எல்லா பொருள்களையும் தூக்கி போட சொல்கிறார். பாரதியின் புகைப்படம் கூட இருக்க வேண்டாம் என சொல்கிறார். வெண்பா அதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் லட்சுமி பாரதி விவாகரத்து பற்றி பேசியதை நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பாரதியிடம் அம்மாவும் நல்லவர் நீங்களும் நல்லவர் உங்க வீட்டில் எல்லாரும் அம்மாவிடம் நன்றாக பேசுகிறார்கள். நீங்களும் அம்மாவிடம் பேசுறீங்க ஆனால் அம்மாவுடன் ஏன் சேர்ந்து வாழவில்லை. ஹேமாவிற்கு உங்களை தொட்டு பேச உரிமை கிடைத்திருக்கு அதை எனக்கு ஏன் கொடுக்காமல் இருக்கிறீர்கள் என லட்சுமி நினைக்கிறார். அப்போது குமார் வர கண்ணம்மா எங்கே என கேட்கிறார். அப்போது குமாரிடம் லட்சுமி எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை என கேட்கிறார். அப்போது குமார் உனக்கு தான் எல்லாரும் இருக்காங்களே என சொல்கிறார். அப்போது லட்சுமி யோசிக்க ஹேமாவின் பாட்டி தாத்தா எல்லாரும் உனக்கும் பாட்டி தாத்தா தான் என சொல்கிறார்.

பின் லட்சுமி எல்லா உண்மையும் தெரிந்துவிட்டு எனக்கு சொல்லாமல் இருக்கீங்க என சொல்கிறார். சௌந்தர்யா பாரதியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்ல, அப்போது சௌந்தர்யா உன்னிடம் சில மாற்றம் வந்துள்ளது என சொல்லி மனைவியை சந்தேகப்படும் கணவர் பற்றி சொல்கிறார். கண்ணம்மாவும் அந்த மனைவியின் நிலைமையில் தான் இருக்கிறாள். குழந்தைக்காக உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறாள் என சொல்ல உடனே பாரதி நான் அவளை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என சொல்லி ஹேமாவை பார்க்க செல்கிறார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – பதிவாளர் சூப்பர் அறிவிப்பு!

அப்போது ஹேமா தூக்கத்தில் அப்பா கல்யாணம் செய்து கொள்ளுங்கள் அவளுக்கும் அப்பா இல்லை எனக்கும் அம்மா இல்லை சமையல் அம்மா ரொம்ப நல்லவங்க என சொல்ல பாரதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் வெண்பா ஷர்மிளா என்ன சொன்னாலும் நம்ம கேரக்டர் மாத்திக் கொள்ள வேண்டாம் என சாந்தியிடம் சொல்கிறார். நான் காலெஜ் படிக்கும் போது பாரதி காதலித்த ஒருத்தியை லாரி ஏற்றி கொன்றேன். எப்படியாவது பாரதி கண்ணம்மாவை பிரிக்க வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா பாரதி விவாகரத்து பற்றி சொன்னதை நினைத்து வருத்தப்பட அப்போது லட்சுமி வந்து பார்த்துவிட்டு கண்ணம்மாவை எப்படி சமாதானம் செய்வது என யோசிக்கிறாள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!