தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – பதிவாளர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தது. அதன்படி தள்ளுபடி அளிக்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தைகளை வரையறுக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளின்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!
இதில் மொத்த கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். ஏராளமானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்ததால் கடன் பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி எவ்வித நிபந்தைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தகுதியானோருக்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையும் வெளியிடப்பட்டு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கவும் அரசு உத்தரவிட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒரு மாத காலத்தில் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.