பாரதியிடம் விவாகரத்து பற்றி கேட்ட ஹேமா, சாரதியுடன் வெண்பாவை பழகவிடும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

0
பாரதியிடம் விவாகரத்து பற்றி கேட்ட ஹேமா, சாரதியுடன் வெண்பாவை பழகவிடும் ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் விவாகரத்து பற்றி கேட்ட ஹேமா, சாரதியுடன் வெண்பாவை பழகவிடும் ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் விவாகரத்து பற்றி கேட்ட ஹேமா, சாரதியுடன் வெண்பாவை பழகவிடும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமியிடம் விவாகரத்து பற்றி கேட்கிறார். பின் வெண்பாவை சாரதியிடன் நெருக்கமாக்க ஷர்மிளா திட்டமிடுகிறார். பின் பாரதி மருத்துவமனையில் பாரதியை ஹேமா பார்க்க வந்து விவாகரத்து பற்றி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதி விவாகரத்து பற்றி பேசியதை நினைத்து ஸ்கூலில் குழப்பமாக இருக்கிறார். அப்போது லட்சுமி வர ஹேமா உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் அதற்கு நீ தான் பதில் சொல்ல முடியும் என கேட்கிறார். அப்போது லட்சுமி என்ன ஹேமா என கேட்க, விவாகரத்து என்றால் அது கணவன் மனைவி ஒன்றாக இருப்பவர்கள் வாங்குவது தான என கேட்கிறார். அப்போது ஆமாம் அன்னைக்கு நம்ம தோழி அப்பா கூட வாங்கினார்களே என சொல்ல ஹேமா நான் பாட்டி அகில் சித்தப்பாவிடம் கேட்டேன் அவரும் அப்படி தான் சொன்னார் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போ டாடி யாருக்கு விவாகரத்து கொடுக்க போகிறார். என் அம்மா தான் இறந்துவிட்டதாக சொன்னாரே என சொல்ல லக்ஷ்மிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. செத்து போனவருக்கு எப்படி விவாகரத்து வாங்க முடியும் என கேட்க லட்சுமி நீ ஏன் இது பற்றி பேசுகிறாய் என கேட்கிறார். டாடி காலையில் டாடி ஒருத்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். கண்டிப்பாக விவாகரத்து வேணும் என சொல்ல அப்போது டாடி சொன்னதை வைத்து தான் கிடைக்கும் என சொன்னார் என சொல்கிறார்.லட்சுமி என்னுடைய அம்மாவிற்கு தான் விவாகரத்து கொடுக்க போகிறார். நீ என் தங்கச்சி ஆனால் உன் அம்மா யார் என எனக்கு தெரியாது என லட்சுமி நினைக்கிறார்.

பின் லட்சுமியிடம் என்ன யோசிக்கிறாய் என கேட்க அப்போது லட்சுமி இதை நீ உன் டாடியிடம் தான் கேட்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஷர்மிளா மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக சொல்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுவரை வந்த மாப்பிள்ளைகள் டம்மி பீஸ் இப்போது வந்துள்ள ரோஹித் தான் உண்மையான மாப்பிள்ளை என சொல்கிறார். நான் நினைத்தது போல நீ டம்மி மாப்பிள்ளையை நீ ஓட விட்டாய் என சொல்கிறார். நீ செய்வது எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் மாப்பிள்ளையை பார்க்க ஏற்பாடு செய்தேன்,

ஆனால் நீங்க நண்பர்களாக மாறிவிட்டீர்கள் இது தான் கடவுளின் அனுக்கிரகம் என சொல்கிறார். இனி எல்லாம் நல்ல படியாக தான் நடக்கும் என சொல்கிறார். பின் மாப்பிள்ளை உடன் கிளம்பு என சொல்கிறார். ஆனால் வெண்பா முடியாது என சொல்ல, பாரதி உடன் போக சொன்னால் வேகமாக போவாய் என கேட்கிறார். பின் மாப்பிள்ளையை அழைத்து வெண்பா உடன் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம் என சொல்ல சாரதியும்வெண்பாவும் கிளம்புகின்றனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் கோரிக்கை!

பின் மருத்துவமனையில் பாரதி இருக்க கண்ணம்மாவை அழைக்கிறார். அட்மின் கொஞ்சம் வர முடியுமா என கூப்பிட்டு யார் யாரிடமோ பேசி அட்மின் ஆகி இருக்கீங்க என சொல்ல தேவை இல்லாத விஷயம் பேச வேண்டாம் என நினைத்தேன் என கண்ணம்மா சொல்கிறார். பாரதி நோட்டீஸ் வந்திருக்கும் அதற்கு பதில் சொல்லுங்க என சொல்ல ,மருத்துவமனை சம்மந்தமான நோட்டீஸா என கண்ணம்மா கேட்கிறார். அதற்கு பாரதி அதெல்லாம் இல்லை விவாகரத்து நோட்டீஸ் என சொல்ல, வாழ்க்கையை பற்றி இங்கே பேச வேண்டாம் என சொல்கிறார்.

பாரதி இந்த முறை யாரு தடுத்தாலும் விவாகரத்து வாங்கி விடுவேன் என சொல்ல, கண்ணம்மா நான் என்னை நம்புகிறேன் போராடி வெற்றி பெற எனக்கு நம்பிக்கை இருக்கிறது என சொல்கிறார். பாரதி என்ன பிளான் வைத்திருக்கிறாய் என கேட்க கண்ணம்மா நீங்க பார்க்க தான போறீங்க என கேட்கிறார். பின் வெண்பாவும் சாரதியும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது வெண்பா ஏன் இவ்வளவு மெதுவாக செல்கிறார் என கேட்க, சாரதி அதன் பின் பயங்கர வேகமாக சென்று கொண்டிருக்கிறார். வெண்பா சாரதியின் நடவடிக்கையை பார்த்து கோபப்படுகிறார். பின் சாரதி பீச் பார்த்துவிட்டு வேகமாக செல்கிறார்.

மறுபக்கம் பாரதியை பார்க்க ஹேமா மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது பாரதி என்ன ஹேமா செய்கிறாய் என கேட்க அப்போது ஹேமா சோகமாக எதுவும் பேசாமல் இருக்கிறார். அன்னைக்கு ஸ்கூலில் நடந்ததை நினைத்து கோவமா என கேட்கிறார். ஹேமா எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் என சொல்ல பாரதி என்ன உண்மை என கேட்கிறார். நீங்க யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க அந்த உண்மை எனக்கு தெரிய வேண்டும் என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். அப்போது பாரதி என் அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க என சொன்னீங்க அப்போ யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க அப்போ என் அம்மா இருந்தால் ஏன் அவரை விட்டு பிரிந்து வந்தீர்கள் என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!