கண்ணம்மாவிடம் சவால் விடும் வெண்பா, ஹேமா மனதை மற்ற முயற்சி செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவிடம் சவால் விடும் வெண்பா, ஹேமா மனதை மற்ற முயற்சி செய்யும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிடம் சவால் விடும் வெண்பா, ஹேமா மனதை மற்ற முயற்சி செய்யும் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிடம் சவால் விடும் வெண்பா, ஹேமா மனதை மற்ற முயற்சி செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி வெண்பா வீட்டிற்கு ஹேமா உடன் போவது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. பின் வெண்பா கண்ணம்மா வீட்டிற்கு வந்து வெறுப்பேத்துவது போல பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமாவின் மனதை மாற்றி வெண்பா வீட்டிற்கு போவோம் என பேசுகிறார். அதை பார்த்த சௌந்தர்யா மற்றும் வேணு, நீ சென்று எங்கே வேண்டும் என்றாலும் இரு ஆனால் ஹேமாவை ஏன் கூட்டி செல்கிறாய் என கேட்கிறார். நானே ஹேமா மனதை பேசி மாற்றி வைத்திருக்கேன் அதை நீங்க எதையாவது பேசி மாற்றினால் அப்பறம் நான் எல்லா உண்மையும் ஹேமாவிடம் சொல்லி விடுவேன். கண்ணம்மா யாரு என்ற உண்மையை சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் லட்சுமி கண்ணம்மாவிடம் நீ அவர்களிடம் சொன்னது எல்லாம் உண்மையா என கேட்கிறார். என்னது என கண்ணம்மா கேட்க, அப்பா உண்மையாகவே வருவாரா என கேட்கிறார். ஆமாம் உண்மையாகவே வருவார் என சொல்ல லட்சுமி சந்தோசப்படுகிறார். பின் சௌந்தர்யா போன் செய்து ஹேமாவிற்கு தெரியாமல் பேசுகிறார். பாரதி இனிமேல் வெண்பா வீட்டில் தங்க போகிறான் ஹேமா உடன் என சொல்ல, அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

பின் ஹேமா அகில் விளையாடி கொண்டிருக்க நன்றாக விளையாடுறீங்க நீங்களே எனக்கு கோச்சாக வர வேண்டும் என ஹேமா சொல்கிறார். அப்போது சௌந்தர்யா அகில் உனக்கு சொல்லி கொடுப்பான் என சொல்ல, பாரதி வந்து அருமையாக திட்டமிடுகிறீர்கள். ஹேமாவை கூட்டிக் கொண்டு போகாமல் இருக்க பல திட்டங்களை தீட்டுகிறீர்கள் என சொல்கிறார். ஆமாம் நான் அப்படி தான் செய்வேன் என சௌந்தர்யா சொல்ல, அகில் ஏற்கனவே நீ இப்படி செய்து ஹேமாவிற்கு முடியாமல் போனது என சொல்ல, நான் வெளிநாடு போகவில்லை என பாரதி சொல்கிறார். அந்த வெண்பா வீட்டில் இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என சொல்ல பாரதி அவரது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

பின் கண்ணம்மா வீட்டிற்கு வெண்பா வருகிறார். நான் எதற்காக இங்கே வந்திருகேன் தெரியுமா என கேட்க எதையாவது சொல்லி வெறுப்பேத்த தான என கேட்க, ஆமாம் இனிமேல் நானும் பாரதியும் ஒன்றாக சேர்ந்து புருஷன் பொண்டாடியாக மாற போகிறேன் என சொல்ல, கண்ணம்மா கோபப்படுகிறார். என்னுடன் ஹேமாவும் சேர்ந்து வாழ போகிறாள் இனிமேல் உன்னையே சமையல் அம்மா என சுத்திய ஹேமா இனி டாக்டர் அம்மா என என் பின்னால் சுத்த போகிறாள் என சொல்கிறார். அதையெல்லாம் கேட்டு கண்ணம்மா கோபப்படுகிறார்.

ஆதார் கார்டு வைத்துள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – PVC அட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?

பின் வெண்பா கிளம்ப வர வழியில் வடிவை திட்டி விடுகிறார். அதனால் கோவப்பட்ட வடிவு கண்ணம்மாவிடம் இது யாரு என கேட்கிறார். அது அவருடைய தோழி என கண்ணம்மா சொல்ல, கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் இருக்கிறாள் என வடிவு சொல்கிறார். ஆமாம் இனிமேல் அவரு இவ வீட்டில் தான் இருக்க போகிறாளாம் என சொல்ல, வடிவு இப்பவே நீதிபதி அம்மா விடம் சொல்லுவோம் என சொல்கிறார். ஆனால் கண்ணம்மா வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

இப்போ வந்தவ சவால் வேற என்னிடம் விடுகிறாள் என சொல்ல, வடிவு அவளை சும்மா விட கூடாது என சொல்கிறார். அவரை ஒரு நாள் ஒரு நிமிஷம் கூட நான் அவரை அங்கே இருக்க விடமாட்டேன் என கண்ணம்மா சொல்கிறார். என் புருஷன் இன்னொருத்தி வீட்டில் இருப்பான் அதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேனா அதை நான் சும்மா விடமாட்டேன் என கண்ணம்மா சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!