ஹேமா, கண்ணம்மா பாசத்தை பார்த்து பொறாமைப்பட்டு சண்டை போடும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
ஹேமா, கண்ணம்மா பாசத்தை பார்த்து பொறாமைப்பட்டு சண்டை போடும் லட்சுமி - இன்றைய
ஹேமா, கண்ணம்மா பாசத்தை பார்த்து பொறாமைப்பட்டு சண்டை போடும் லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமா, கண்ணம்மா பாசத்தை பார்த்து பொறாமைப்பட்டு சண்டை போடும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று, கண்ணம்மா வீட்டில் பாரதி உப்புமா சாப்பிட்டதை சௌந்தர்யா கிண்டல் செய்கிறார். ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசத்தை பார்த்து லட்சுமி கோவமடைகிறார். வெண்பா, பாரதியும் கண்ணம்மாவும் இனி பார்க்கவே கூடாது என திட்டமிடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யாவும், வேணுவும் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு போனதை நினைத்து நக்கலடித்து சிரித்து கொண்டிருக்கின்றனர். அவனுக்கு உப்புமாவை பிடிக்காது ஆனால் கண்ணம்மா வீட்டிற்கு சென்று உப்புமா சாப்பிடுகிறான். அவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என சௌந்தர்யா திட்டமிடுகிறார். அப்போது பாரதி அங்கே வர அவரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார். பாரதி எரிச்சலடைந்த சாப்பிட எதாவது கிடைக்குமா என்று கேட்க சௌந்தர்யா உப்புமா செய்து கொடுக்கிறார். பாரதி அதை பார்த்து கோவமடைகிறார்.

இந்தியாவில் கொரோனா 3ம் அலை தாக்கம் அக்டோபரில் தீவிரம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீ ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு போனதும் தெரியும் உப்புமா சாப்பிட்டதும் தெரியும் என சொல்ல பாரதி எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். கண்ணம்மா, ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவள் எதிர்கால கனவு குறித்து கேட்கிறார். ஹேமா தன் அப்பாவை போல பெரிய டாக்டர் ஆக வேண்டும் எனவும் பின்னர் விமானம் ஓட்ட வேண்டும் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா விமானத்தில் என்னை கூட்டிக்கொண்டு போவியா என்று கேட்க கண்டிப்பா, நீங்க அப்பா, நான் எல்லாரும் போவோம் என்று சொல்ல லட்சுமி அதை பார்த்து பொறாமைப்படுகிறார்.

ஹேமாவும், கண்ணம்மாவும் கொஞ்சிக் கொள்வதை பார்த்து லட்சுமி மிகுந்த கோபமடைந்து ரூம் சென்று லட்சுமியின் ட்ரெஸ்களை தூக்கி எறிகிறார். ஹேமா வந்து என்ன செய்கிறாய் என்று கேட்க நீ ஏன் இங்க வந்த உன்னால தான் சமையல் அம்மா என்னை பார்த்துக்கொள்ளமாற்றங்க நீ உங்க வீட்டுக்கு போ என்று பேச ஹேமா அழுக தொடங்குகிறார். அவள் அழுவதை பார்த்து லட்சுமி மனம் மாறி சாரி கேட்கிறார்.

அண்ணா பல்கலை துணைவேந்தராக தமிழர் நியமனம் – ஆளுநருக்கு கோரிக்கை!

பின்னர் பாரதி அடிக்கடி கண்ணம்மா வீட்டிற்கு செல்வதை நினைத்து வெண்பா புலம்பி கொண்டிருக்கிறார். சாந்தியும் வெண்பாவும் அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிடுகின்றனர். ஹேமா, லட்சுமி விமானத்தில் சென்றதை பற்றி பேசி கொண்டிருக்க கண்ணம்மா அங்கே வந்து யாருக்கு சாரி மற்றும் நன்றி சொல்லுவீங்க என்று கேட்க லட்சுமி , ஹேமாவிற்கு சாரி, டாக்டர் அங்கிள் தான் என்ன படிக்கச் வைக்கிறாங்க அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்வேன் என்று சொல்கிறார். ஹேமா, தனது அப்பாவிற்கு சாரி, சமையல் அம்மாவிற்கு நன்றி சொல்வேன் என்று கூறுகிறாள். பின்னர் ஹேமா, லட்சுமி, கண்ணம்மா மூவரும் சந்தோசமாக விளையாடி கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!