இந்தியாவில் கொரோனா 3ம் அலை தாக்கம் அக்டோபரில் தீவிரம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி நிறுவனங்கள் கொரோனா 3ம் அலை குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவில் கொரோனா 3ம் அலை தாக்கம் நடப்பு மாதத்திலேயே ஆரம்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா 3ம் அலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை தாக்கம் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் தொடங்கியது. தொடர்ந்து தொற்றின் பாதிப்பு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தீவிரமடைந்தது. இதனால் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் மெல்ல ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 29% பேர் – அரசு அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 40,134 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 422 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 4,24,773 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்றின் 3ம் அலை அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர்.
TN Job “FB Group” Join Now
ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி நிறுவனங்கள் கொரோனா 3ம் அலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி, கொரோனா 3வது அலையின் தாக்கம் இந்த மாதமே இருக்கும் என்றும், வரும் அக்டோபரில் உச்சத்தை தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலை, 2வது அலையை போன்று மிகத்தீவிரமாக இருக்காது. மேலும், கொரோனா 3ம் அலையில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தொடும் என்றும், 3ம் அலை உச்சம் தொடும்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.