தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 29% பேர் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை 29%மட்டுமே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அதிக அளவிலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
அண்ணா பல்கலை துணைவேந்தராக தமிழர் நியமனம் – ஆளுநருக்கு கோரிக்கை!
இதனால் தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசிடம் தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வரை 2,30,71,282 பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.15 கோடி தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
1,97,18,380 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 33,52,902 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை 29 சதவீத பேரும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 7 சதவீத பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் முன்னதாக குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பதிப்பின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.